குரு பெயர்ச்சியால எந்த எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டமும் நல்ல வாய்ப்புகளும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம். யார் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான் இயற்கையாகவே சுபகாரர். எல்லா ராசிக்காரர்களுக்கும் நல்லது மட்டுமே செய்வார். கோச்சார ரீதியில் குரு பகவான் நமது ராசியில் பயணம் செய்தாலோ அல்லது நமது ராசியில் குரு பார்வை கிடைத்தாலே நல்ல பலன்களும், அனைத்தும் சுபமாக நடைபெறும். வருகிற ஏப்ரல் மாதத்தில் குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார். ராகுபகவானுடன் இணைந்து பிரயாணம் செய்யகிற குருபகவான் யார் யாருக்கெல்லாம் ராஜயோகத்தை தரப்போகிறார். செல்வம், செல்வாக்கினை அதிகரிக்கப்போகிறார் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
நவகிரகத்தில் சுப கிரகத்தில் தலைச்சிறந்த கிரகமாக விளங்குபவர் குரு பகவான் மட்டுமே . குரு கிரகமானது புத்திரம், பொருளாதாரம் , வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயம் , பூர்வீக சொத்துக்கள் மற்றும் புண்ணியம் போன்றவைகளுக்கு காரனமானவர் . குரு கிரகமானது ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். தனுசு மற்றும் மீனம் ராசிதான் குருவிற்கு ஆட்சி வீடாக இருக்கிறது . கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். பொதுவாக குரு தனியாக இருப்பது நல்லது அல்ல. கோட்சாரத்தின் ரீதியில் ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 9,11 ஆகிய பாவங்களில் வரும்போது போது நல்லபலன்களையே தருவார்.
குருபகவான் இருக்கும் இடத்தை விட அவர் செல்லும் இடங்கள் பலம் பெறும். குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு வருடத்திற்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைவார் . குருபகவான் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து , ஏழு , ஒன்பது ஆகிய இடங்களை பார்க்கிறார் குருபகவான். பொதுவாக எவ்வளவு கெட்டதோஷம் இருந்தாலும் குருபகவான் பார்த்தாலே கெட்டதோஷம் விலகி விடும். நடக்கப்போகும் குரு பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஜென்மராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம் ராசி :
மேடு பள்ளம் நிறைந்த மேஷ ராசிக்காரர்களே..... உங்களுக்கு ஜென்மத்தில் குருபகவான் நல்ல மாற்றத்தை தரப்போகிறார் . குருவின் பார்வையால் தொழில் மாற்றம் ஏற்படும் . அப்பாவின் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். ராகுபகவான் மற்றும் குருபகவான் சேர்க்கையால் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. பெரிய பெரிய பதவிகள் தேடி வரும். பெயர் , புகழ், செல்வம், செல்வாக்கு உங்களை தேடி தேடி வரும்.எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்பு ஒருமுறைக்கு இரண்டு முறை யோசனை செய்வது நல்லது. வேலை மாற்றம் செய்யும் முன்பு வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கலந்து ஆலோசனை செய்து கொள்ளுங்கள் . உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குருபகவானின் பார்வையால் புத்திரபாக்கியம் கிடைக்கும் நற்செய்திகள் தேடி வரும். பொருளாதார நிலை நன்மையாகவே இருக்கும். குருதசை,குருபுத்தி நடப்பவர்கள் வியாழக்கிழமைதோறும் குருபகவானை வணங்குவது நல்லது.
ரிஷபம் ராசி :
மென்மையாக திகழும் ரிஷப ராசிக்காரர்களே..... உங்கள் ராசியில் நல்ல விசேஷங்கள் நடைபெறும். தனலாபம் அதிகரிக்கும். அதே நேரத்தில் வந்த பணம் கரைந்து காணாமல் போகலாம் கவனிக்கவும் . ராகுபகவான் குருபகவான் சேர்க்கையினால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயத்தில் கவனம் தேவை. வயிறு தொடர்பான (அல்சர் , வாய்வு )பிரச்சினை வரூம் . புதிதாக வாகனம் வாங்கலாம். வீட்டுமனை கட்டலாம் கட்டிய வீட்டினை வாங்கலாம். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும் . பணம் கொடுத்தல் வாங்குதலில் கவனமாக இருக்கவும் .
மிதுனம் ராசி :
மிரள வைக்கும் மிதுன ராசிக்காரர்களே..... குருபகவான் உங்களுக்கு லாப குருவாக இருப்பதால் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல யோகத்தை தரப்போகிறார். ராகுபகவான் உடன் இணைய போகும் குருபகவான் மிதுன ராசிக்கு தொழிலில் பெரிய மாற்றத்தை தரப்போகிறார். நல்ல பண வருமானத்தை தரப்போகிறார். வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைக்கும். புகழ், செல்வம், செல்வாக்கு பெருகும் . நல்ல முன்னேற்றம் கிடைக்கும் . உடன்பிறப்புகளின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். குழந்தை செல்வம் பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குருபகவானின் அருள் வரம் கிடைக்கும்.
கடகம் ராசி :
கடினத்தை உடைக்கும் கடக ராசிக்காரர்களே..... உங்களுக்கு குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் ராகுபகவானும் இணைவதால் எதிர்பாராத மாற்றம் நடக்கப்போகிறது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்ப்பாராத விதத்தில் திடீர் மாற்றங்கள் நடக்கும் . மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது . மிகவும் புத்திசாலித்தனமாக எதையும் யோசித்து செய்ய எப்போதும் தயாரா இருங்கள் . அஷ்டமத்து காலமாக இருப்பதானால் ஒருமுறைக்கு இருமுறை எதையும் சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. குடும்ப சூழ்நிலை மிக நன்றாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். இதே நேரத்தில் கையில் இருக்கிற பணத்தை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். ஊர் இடம் மாற்றம் உண்டாகலாம் . பழைய வாகனங்களை கொடுத்து புது வாகனங்களை வாங்கலாம். பெரிய சவால்கள் நிறைந்த குரு பெயர்ச்சியாக இருக்கும் உங்களுக்கு .
சிம்மம் ராசி :
சிம்மாசனமாக திகழும் சிம்ம ராசிக்காரர்களே .....பாக்ய ஸ்தானத்தில் குருபகவான் ராகுபகவானுடன் இணையப்போகிறார். சிம்ம ராசிக்கு கவுரவ பதவியும் தேடி வரும். வேலை பார்ப்பவர்களுக்கு பெரிய பதவி தேடி வரும். செல்வம், செல்வாக்கு நாடி வரும். நல்ல பொருளாதாரமும் தேடி வரப்போகின்றது. புகழும் கவுரமும் தேடி வரப்போகின்றது. அதிர்ஷ்டமும் அற்புதங்களும் நடக்கவிருக்கிறது . எதிர்பாராத இடத்தில் இருந்தெல்லாம் பணம் வரப்போகின்றது. அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களை தேடி கிடைக்கும். காதல் கைகூடும் கல்யாண யோகம் வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் நீங்களே நினைக்காத எதிர்பாராத விதத்தில் வளர்ச்சியையும் செல்வத்தையும் தரப்போகிறது. மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிதான் நீங்கள்தான். அனுபவிக்கத் நீங்க ரெடியா .
கன்னி ராசி :
கண்களிலே பேசும் கன்னி ராசிக்காரர்களே .....குருபகவான் ராகுபகவானுடன் இணைந்து எட்டாம் வீட்டில் பிரயாணம் செய்யப்போகிறார். பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் . அதிக கடன் உங்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் வேண்டாம் . லாட்டரி, வணிகத்தில் பணத்தை போட வேண்டாம். குருபகவான் பார்வை உங்களுக்கு சுப விரையத்தை தரப்போகிறது. அதனால் சொந்த வீடு மற்றும் வாகனங்கள் வாங்கலாம். இடமாற்றம் உறுதியாக ஏற்படும். அஷ்டமத்து குருபார்வையினால் உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்களை ஏற்படும் . சரியான நேரத்தில் சத்தான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை . உத்யோகத்தில் மாற்றம் ஏற்படலாம் . தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவீர்கள் .
No comments:
Post a Comment